ஆசிரியர் தின வாழ்த்துகள்..

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
            கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
            நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
            உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
            அமைபவன் நூலுரை யாசிரி யன்னே

- நன்னூல்

உயர்ந்தக் குடியில் பிறந்தவராகவும் கடவுள் பக்தி உடையவராகவும் பல நூல்களைக் கற்றறிந்த அறிவும், அவ்வறிவை மாணக்கர் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்தியம்பும் ஆற்றல் உடையவராகவும், நிலத்தையும், மலையையும், துலாக்கோலையும், மலரையும் ஒத்தக் குணங்களை உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள் பலவற்றை உள்ளடக்கியவராகவும் விளங்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்..

காலை வணக்கம்..