நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.




இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:

 

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

 

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

 

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

 

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

 

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

 

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

 

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

 

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

 

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

 

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

 

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

 

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

திருடு போன உங்க பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது.


 திருடு போன உங்க பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது.

ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன பைக்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் தொடர்ந்து காணலாம்....

குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்குங்கள்.

மொபைல்போனை சைலண்ட் மோடில் வைப்பதோடு,வைப்ரேஷன் மோடில் இருந்தால் அணைத்துவிடவும்.

மொபைல்போன் மீது தூசு, தும்பட்டிகள் படியாதவாறு பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவிடுங்கள்.
மற்றொரு மொபைல்போனிலிருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்க.அந்த மொபைல்போனை பைக்குகுள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்க அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்க. வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும். 

ஒருவேளை, பைக் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால், 5 நிமிடங்களில் உங்களது பைக் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து பைக் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்...!